Pages

Tuesday 1 March 2011

அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, எந்த விதமான புதிய திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

 இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், பிற உயர் பதவியில் உள்ளவர்கள் நிதி உதவி குறித்த திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
 திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்ட வேண்டிய அவசியம் இருப்பின் அதை அதிகாரிகள் செய்ய வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த வாக்குறுதிகளையும் அளிக்கக் கடாது.
 அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணி நியமனத்துக்கான உத்தரவுகளை அளிக்கக் கூடாது. தேர்தல் தொடர்பான பணிகளுக்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்று பிரவீன் குமார் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment