Pages

Thursday 3 March 2011

முத்தரையர் மக்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டி: 6-ம் தேதி முதல் பிரசாரம்

தமிழகத்தில் முத்தரையர் மக்கள் கட்சி சார்பில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் முத்தரையர் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தங்க குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முத்தரையர் மக்கள் கட்சி சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரும் 6 -ம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும், அதிக வாக்குகள் பெறும் கட்சியை ஆளும் கட்சியாக அறிவிக்க வேண்டும் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் வடிவழகன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், தர்மராஜ், சரவணன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment