Pages

Friday 4 March 2011

திமுகவுக்கு விவசாயத் தொழிலாளர் கட்சி ஆதரவு-ஒரு சீட் கேட்கிறது!

முதல்வர் கருணாநிதியை விவசாயத் தொழிலாளர் கட்சியினர் இன்று சந்தித்து திமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தங்களது கட்சிக்கு ஒரு சீட் தருமாறு கேட்டுள்ளதாகவும் அக்கட்சித் தலைவர் பொன்.குமார் கூறியுள்ளார்.

திமுகவுக்கு பல்வேறு சிறிய கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கூடவே சீட்டும் கேட்டு கோரிக்கை வைத்து விட்டு வருகின்றன.

அந்த வகையில் விவசாயத் தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் பொன். குமார், திமுகவுக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்தோம். திமுக கூட்டணி இத்தேர்தலில் பெரும் வெற்றி பெறும்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment