Pages

Tuesday 12 April 2011

காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும்

காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மள்ளர் மீட்பு களத்தின் தலைவர் திரு. செந்தில் மள்ளர்

                தாய் நிலமாம் தமிழ்மண்ணிலிருந்து எம்மினத்தின் வரலாற்றுப் பெரும்பகையான காங்கிரசுக் கட்சியை  அழித்து, அகற்றி இனமானம் காக்கும் கடமையில் மள்ளர் மீட்புக் களத்தின் அனுபவங்களை ஆற்றுப்படுத்துகிறேன். சாதி, இனம் என்கிற எல்லைகளைக் கடந்து மனிதன், மனிதநேயம் என்பதையும் கடந்து எந்தவொரு உயிரினங்களும் இவ்வாறு கொன்று குவிக்கப்படுவதை உணர்ச்சியுள்ள மனிதன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். மரபுவழிப் போருக்கு முற்றிலும் மாறாக சர்வதேசமே தடைசெய்த வேதியியல் குண்டுகளை வீசி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும், போராளிகளையும் கரிக்கட்டையாக்கி "பாதுகாப்பு வலயத்திற்குள் அடைத்து" பிஞ்சுப்பிள்ளைகள், பெண்கள், பெரியோர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழ் உறவுகளின் உயிரைக்குடித்த இத்தாலிய இழிமகள் சோனியாவின் தலைமையிலான காங்கிரசுக் கட்சியைக் கருவறுத்தே ஆகவேண்டும் என்னும் உறுதியேற்று அந்தக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளில் விளாத்திகுளம்,கடையநல்லூர், வாசுதேவநல்லூர், திருவைகுண்டம், விருதுநகர், பரமக்குடி, இராமநாதபுரம், வால்பாறை, திருத்துறைப்ழுண்டி கோவை ஆகிய 10 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தேர்தல் பணி செய்யத் திட்டமிட்டோம்.
    என் தந்தை ஒரு ஆசிரியர். காங்கிரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். நேரு, காந்தி, இந்திரா, காமராசர், கக்கன் ஆகிய தலைவர்கள் மீது அளவுகடந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தவர். எனது மாமனார் ஒரு காங்கிரசுக் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தாய்மாமனார்கள் இரண்டு பேர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் காங்கிரசுக் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சி இந்த மக்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்தக்கட்சி ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை தமிழின உறவுகள் உணர்ந்தாக வேண்டும்.
                மார்ச் 30 இல் முதன்முதலாக விளாத்திகுளம் தொகுதியில் எங்களின் வேலையைத் தொடங்கினோம். பல்வேறு சிற்றூர்களுக்கும்  பயணித்தோம் வேளாண்தொழிலிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த பலநூறு மக்களைச் சந்தித்தோம் அவர்களை ஒருகணம் சிந்திக்கவும் செய்தோம். துண்டறிக்கைகளை எமது மக்களின் கைகளில் கொடுத்து குருதிக்கரை படிந்த காங்கிரசுக் கட்சியின் கைகளை துண்டாடினோம். அன்றிரவு விளாத்திகுளம் நகரில் தெருத்தெருவாக கடைவீதிகளில் துண்டறிக்கைகளை விளம்பினோம்.  ஓரிடத்தில் ஐந்தாறு பேர் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். "தமிழினத்தை அழித்தொழித்த காங்கிரசுக் கட்சியைக் கருவறுப்போம்" என தலைப்பிடப்பட்ட துண்டறிக்கைகளை அவர்களிடம் கொடுத்தபோது அந்த ஐந்தாறு கிழவர்களும் தள்ளாடும் வயதிலும் கொதித்தனர். குதித்தெழுந்தனர். காங்கிரசுக் கட்சியின் அந்த ஒட்டுமொத்த நகர உறுப்பினர்களும் கெட்ட சொற்களால் எங்களைத் திட்டத்தொடங்கினர். என்னோடு வந்த தம்பிகளிடமிருந்து எதிர்வினை நிகழவே அடங்கிக் கொண்டனர். தொடர்ந்து நாங்கள் தெருவீதிகளிலும்,  நகரப்பேருந்துகளிலும் மக்களைச் சந்தித்து இரத்தக்கரை படிந்த காங்கிரசின் கையை முறிக்குமாறு உரிமையோடு வேண்டுகோள் விடுத்து அன்றைய பரப்புரையை அத்தோடு முடித்துக் கொண்டோம். மறுநாள் மார்ச் 31 இல் காங்கிரசுக் கட்சிக்கு எதிராக களத்தில் நின்ற வேட்பாளர் எங்களைச் சந்தித்து எங்களின் பரப்புரைப்
பயணத்திற்கான உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்தியதோடு உற்சாகமாக எங்களிடமிருந்து 1000 துண்டறிக்கைகளை அவரே கேட்டுப் பெற்றுக்கொண்டார். எங்களின் பயணம் தொடர்ந்தது பல ஊர்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து பரப்புரையை மேற்கொண்டோம். துண்டறிக்கைகளைக் கண்டதும்  தொடர்ந்து வாழ்த்துச் செய்திகள் எமக்கு வந்துகொண்டிருந்தன. அதில் ஒரு அலைபேசி தொடர்பில் "அய்யா நானும் ஒரு தமிழன் தான். நீங்கள், உங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேளுங்கள் எங்களை வேதனைப்படுத்தாதீர்கள்" என்று ஒரு பெரியவர் பேசிப்புலம்பினார். தொடர்ந்து அவர் இந்திராகாந்தி குடும்பத்தையே நீங்கள் அங்கப்படுத்திவிட்டீர்கள் என்று வருந்தினார். அதற்கு நாம், நாங்கள் அந்தக் குடும்பத்தை அசிங்கப்படுத்தவில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் பிழையான, கீழ்மையான அனுகுமுறையே அந்தக் குடும்பத்தை அசிங்கப்படுத்திவிட்டது என்றோம். நாங்கள் காந்தியவாதிகள் எங்களைப்பார்த்து  காங்கிரசின் கையை முறியுங்கள் என்று வன்முறையாக எழுதியுள்ளீர்களே? என்றார் அந்தப் பெரியவர், நாங்கள் காங்கிரசுக் கட்சியின்
கரைபடிந்த கைகளைத்தான் முறிக்கச் சொன்னோமே தவிர காங்கிரசுக் கட்சிக்காரர்களின் கைகளை முறிக்கச் சொல்லவில்லை. இதற்கே இப்படித் துடிக்கிற நீங்கள் ஈழத்தில் எங்கள் உறவுகள் கொல்லப்பட்டபோது என்ன செய்தீர்கள் என்றேன் அதற்கு அவர் பதிலளிக்க முடியாமல் திக்கற்றுத் திணறினார். நானும் தமிழன் தானய்யா என்றார். அதற்கு நான் மீண்டும் மீண்டும் அந்தத் துண்டறிக்கையை வாசியுங்கள், யோசியுங்கள் நீங்கள் உண்மையான தமிழனாகவே ஆகிவிடுவீர்கள் அதன்பின் நாங்கள் செய்கின்ற வேலையை நீங்களே  செய்வீர்கள் என்றேன். நீங்களும் தமிழன் என்றால் மரியாதைக்குரிய காந்தியவாதி தன்மானமுள்ள தமிழன் தமிழருவி மணியன் போல்  அந்தக் கொலைகாரக் காங்கிரசிடமிருந்து உறவை அறுத்துக்கொண்டு வெளியேறி வாருங்கள் எங்களுக்கு ஆலோசனை கூறுங்கள். எங்களை வழிநடத்துங்கள் அங்கிருந்துகொண்டு நீங்கள் என்ன சொன்னாலும் அதைக்கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை என்று அந்தப் பெரியவருக்கு விடைகொடுத்தேன். வியாத்திகுளம் தொகுதியில் 7000 துண்டறிக்கைகள் வேலைசெய்துகொண்டிருக்கிறது.  தொடர்ந்து தொடர்புகள் வந்தவண்ணம் உள்ளன.
                ஏப்ரல் 1 இல் கடையநல்லூர் தொகுதியில் களம் கண்டோம் 4000 துண்டறிக்கைகள் நாலா திகையிலும் மக்களிடம் பரப்பினோம்.  பற்றிக்கொண்டது பகையை எரிக்கும் நெருப்பு. தமிழ் படர்ந்த நெஞ்சங்கள் வஞ்சகக் காங்கிரசை வீழ்த்தி விரட்டியடிக்க வேண்டுமென்று  அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது நெஞ்சுக்கு நிம்மதியைத் தருவதாக இருந்தது. ஏப்ரல் 2, 3 தேதிகளில் வாசுதேவநல்லூர் தொகுதியில் பரப்புரையை மேற்கொண்டோம். காங்கிரசுக் கட்சிக்கு எதிரணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் எதிர்க் கட்சியின் வேட்பாளரோ சவத்திற்குச் சமமாகக் கிடந்தார். எங்களைக் கண்டுகொள்ளவில்லை நாங்களும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தத் தொகுதியில் 6000 துண்டறிக்கைகளைப் பரப்பினோம்.  அந்தத் தொகுதிக்குட்பட்ட புளியங்குடியில்  காங்&திமுக கூட்டணியில் உள்ள "பூரண மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தும்"  பாட்டாளி மக்கள் கட்சியினர் இருவர் முழுப்போதையில் வந்தனர்.அவர்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுத்தபோது "இது உறுப்படியான  வேலை எந்தக் கட்சி எப்படிப் போனாலும்சரி காங்கிரசை ஒழித்தே ஆகவேண்டும் என்றனர். அவ்வாறே அந்தத் தொகுதிக்குட்பட்ட சிவகிரியிலும் சிலர் இம்முயற்சியை பாராட்டி வாழ்த்தினர். காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த ஒரு கிழவர் எங்களைப் பார்த்து உளறினார்.  அண்ணன் சீமானைத் திட்டினார். அந்தக் குடிகாரக் கிழவரின் பேச்சைப் பொருட்படுத்தாமல் பொறுப்புடன் கடமையைச் செய்துவிட்டு  அங்கிருந்து வெளியேறினோம்.  ஏப்ரல் 4 இல் திருவைகுண்டம் தொகுதிக்குச் சென்றோம் 5000 துண்டறிக்கைகளைப் பரப்பினோம். அங்கு எங்களுக்கு எவ்வித ஆதரவும் இல்லை அதே வேளையில் எதிர்ப்பும் இல்லை.
                ஏப்ரல் 5,6 இல்  விருதுநகர் தொகுதியில் வெலை செய்தொம் காங்கிரசுக் கட்சியின் எதிர் வேட்பாளர் நாங்கள் வேலை செய்வது தெரிந்தும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. அந்தச் சூழலிலும் 7000 துண்டறிக்கைகளை பரப்பினோம். ஏராளமான தொலைபேசி தொடர்புகள் வந்தன. அதில் ஒரு தொடர்பில் எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன ஒருவர் "நல்ல முயற்சி ஆனால் மள்ளர் மீட்புக் களம் என்று ஒரு சமூக அமைப்பின் பெயரை மட்டுமே போட்டுக்கொண்டீர்களே"என்றார். அதற்கு நாம் மள்ளர் மீட்புக் களம் தனது இனக்கடமையைச் செய்கிறது நீங்களும் இனக் கடனாற்றுவதற்கு எமது இயக்கம் இடையூறாக இருக்காது. எங்களின் ஆற்றலுக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்கிறோம். நாம் தமிழர் கட்சியினர் அவர்களின் ஆற்றலுக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்கிறார்கள் என்றதும்  அவர் உணர்ந்து கொண்டார்.
                ஏப்ரல் 7 இல் 4000 துண்டறிக்கைகளோடு பரமக்குடியிலும், ஏப்ரல் 8 இல் 6000 துண்டறிக்கைகளோடு இராமநாதபுரத்திலும் களத்தைச் சந்தித்தோம். காங்&திமுக கூட்டணியில் உள்ள பா ம க நிர்வாகிகள் எம்மோடு துணை நின்றனர். இறுதியாக பாரதிய சனதா கட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த அரண்மனை வீதியில் அணிதிரண்டிருந்த மக்களிடம் துண்டறிக்கைகளைத் தூவி எங்களின் கடமையைச் செய்தோம். காவல்துறையினரும் அவர்களின் கடமையைச் செய்தனர். அனுமதியின்றி துண்டறிக்கைகள் கொடுத்ததாக எங்களை அழைத்துச்சென்று தெர்தல் ஆணைய அதிகாரிகளை அவமதித்ததாக வழக்கு ஒன்றினை பதிவுசெய்து விட்டு எங்களை விடுவித்தனர். காவல் நிலையத்தின் எழுத்தராக இருந்த தலைமைக் காவலர் ஒருவர் துண்டறிக்கையைப் படித்துவிட்டு சோனியாவின் சொந்தப் பெயரையும், சொந்தத் தொழில் மதுபானப் பணிப்பெண் என்பதையும் வாசித்தவுடன் "சோனியா சோனியா சொக்கவைத்த சோனியா" என்ற பாடலைப் பாடி காவல் நிலையத்திற்குள் எங்களுக்குமுன் ஆடிமகிந்தார். காவல்துறையினர் அனைவரும் எங்களிடம் அன்போடு நடந்துகொண்டனர். நாங்கள் கைது செய்யப்பட்ட செய்திகேட்டு பா ம க, மதிமுக, நாம்தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் என்று  நமது தோழமை இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் விரைந்து வந்து வழக்கு தொடர்பான உதவிகளுக்கு உறுதுணையாற்றினர். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். அதற்கு அவர்கள் எங்கிருந்தோ வந்து நாங்கள் செய்யவேண்டிய வேலையை எங்கள் தொகுதியில் நீங்கள் செய்துள்ளீர்கள் அதற்காக நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்  என்றனர் மகிழ்ச்சியோடு. இரவில் பயணத்தைத் தொடங்கினோம் மலைக்காட்டுப்பாதையில் மான்களின் நடமாட்டத்தை நள்ளிரவில் காணமுடிந்தது. அதிகாலை 5 மணிக்கு வால்பாறை வந்தடைந்தோம் குறைந்தபட்ச குளிர் இருந்தது.விடிந்ததும் வேலையைத் தொடங்கினோம்.  நாங்கள் துண்டறிக்கைகள் கொடுக்க நாம் தமிழர் கட்சியினர் 4 போரை அழைத்துச்சென்று வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரசுக் கட்சியின் வேட்பாளர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடினார் என்பதற்காகவும்  மாதந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உறுப்பினருக்கு ரூபாய் 100 வீதம் கொடுத்து உதவினார் என்பதற்காகவும் அந்தப்பகுதியில் ஒருசிலரின்  எதிர்ப்புக் குரலும் இருந்தது. அதையும் கடந்து வீடுவீடாகச் சென்று ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்ட  காட்சிகளைக் கண்டுகாட்டி மக்களிடம் காங்கிரசுக் கட்சியின் தமிழினத் துரோகத்தைத் தோலுறித்துக் காட்டினோம். தேர்தல் ஆணையத்தின்  கெடுபிடிகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கடந்து நாங்கள் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்துமுடித்தோம்.  8000 துண்டறிக்கைகளைப் பரப்பிவிட்டு ஏப்ரல் 10 இல் வால்பாறை அண்ணா திடலில் நடந்த நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் சந்தனக்காடு இயக்குனர் கௌதமனுடன் பங்கெடுத்து உரை நிகழ்த்தினேன். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் புதிய தமிழகத்தின் பொறுப்பாளர்கள் எம்மை புடைசூழ்ந்து கொண்டனர். துண்டறிக்கைகளைக் கண்டு  துடித்துப்போன குடிகாரக் காங்கிரசுக் கட்சிக்காரர்கள் எம்மிடம் கேள்விகேட்க வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் எமது உறவுகள் எம்மோடு ஒன்றுசேர்வதைக் கண்டு அந்தக் காங்கிரசுக் காரர்கள் கலைந்து போய்விட்டனர்.
                திருத்துறைப்பூண்டி, கோவை தொகுதிகளில் அப்பகுதியில் உள்ள மள்ளர் மீட்புக் களத்தின் பொறுப்பாளர்கள் பு.வெ.அசோக்பண்ணாடி  அவர்களும் கடம்பை வே.பாசுக்கரச்சோழன் அவர்களும் அந்தப் பணியினை திறம்படச் செய்துமுடித்துள்ளனர். இவ்விரு தொகுதிகளிலும் 7000 துண்டறிக்கைகள் மக்களிடம்  கொண்டுசேர்க்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடந்த  பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசும்போது மள்ளர் மீட்புக் களம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையை தூக்கிப்பிடித்து என் தம்பி செந்தில்மள்ளர் காங்கிரசுக் கட்சியினரிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். இதில் ஒரு கேள்விக்காவது காங்கிரசுக் கட்சிக்காரன் எவனாவது பதில் சொல்லமுடியுமா? என்று அறைகூவல் விடுத்துள்ளார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணன்  சீமானின் பேச்சைக் கேட்டுவிட்டு, மள்ளர் மீட்புக் களத்தின் துண்டறிக்கைகளையும் படித்துவிட்டு நாம் தமிழர் கட்சியில் சேரவேண்டும்  அண்ணன் சீமானோடு பேசவேண்டும் என்று பல ஆண்களும் பெண்களும் எம்மோடு தொடர்பு கொண்டு பேசினர். அவர்களை கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தோம்.
                இப்படியபக இந்தத் தேர்தல் பரப்புரை பயணம் இனக்கடனை ஆற்றிய மனநிறைவோடு நிறைவுபெற்ற போதிலும், எம்மினத்தை அழித்த வரலாற்றுப் பெரும்பகை காங்கிரசுக் கட்சியை தமிமு மண்ணிலிருந்து சுவடு தெரியாத அளவிற்கு அழித்து, அகற்றி, அப்புறப்படுத்தும் வரை & எமது இனத்தின் எதிரியை வீழ்த்துகின்ற, விரட்டியடிக்கின்ற இந்தப் பயணம் ஓயாத அலைகளாக உறங்காது  ஓசையெழுப்பிக் கொண்டுதானிருக்கும்.
 
  

Monday 11 April 2011

வேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன்


Defeat congress என்ற வலைபூவை நடத்திவரும் திரு. சிவக்குமார் அவர்கள் வேலூரில் தனது பரப்புரை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.


நேற்று வேலைகளை முடித்த பிறகு மாலையில் வேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சதீஷ் என்பவருக்குத் தொலைபேசினேன்  'வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கிறோம். மண்டி தெரு என்ற இடத்தில்' என்றார்.

பழைய பேருந்து நிலையம் நிறுத்தத்தில் இறங்கி வெளியில் வந்து கடைத்தெருவிற்குள் நடந்தேன். பிரதான வீதியிலேயே சத்தம் கேட்டது. ஒரு டாடா ஏஸ் வண்டியில் ஒலி அமைப்பு வைத்து, பக்கவாட்டில் தட்டிகளைக் கட்டி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சதீஷ் பிரதான பேச்சாளர். துண்டறிக்கை வினியோகிக்க நான்கைந்து பேர். துண்டறிக்கை வினியோகித்துக் கொண்டிருந்த கண்ணனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் கையிலும் துண்டறிக்கை நகல்களைக் கொடுத்து வினியோகிக்கச் சொன்னார். சதீஷ் ஓய்வெடுக்கும் போது கண்ணன் ஒலிபெருக்கியைக் கையில் எடுக்கிறார். இடை இடையே 'கோஷம்' என்ற பெயரில் ஒருவர் சொல்ல, நான்கைந்து பேர் சொன்னதைத் திருப்பிச் சொல்வதைச் செய்தார்கள்.

'காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'
'காங்கிரசைத் தோற்கடிப்போம்'
'ஞானசேகரனைத் தோற்கடிப்போம்'
'நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள்'

'நாங்கள் யாருக்கும் ஓட்டு கேட்டு உங்களிடம் வரவில்லை. எங்களுக்கு வாக்களித்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று பொய் வாக்குறுதி அளிக்க வரவில்லை. காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்கிறோம்'

'ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொலை செய்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'

'கேட்டாரா, கேட்டாரா ஞானசேகரன் கேட்டாரா
- பாலாற்றுப் பிரச்சனையைக் கேட்டாரா
- குடிநீர் பிரச்சனையைக் கேட்டாரா
- அவர் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்
- தமிழர்களின் உயிரை மட்டும்

'ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்.'

'தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும்
சிங்கள இனவெறி அரசுக்கு
ஆயுதம் கொடுக்கும் காங்கிரசுக் கட்சி,
காங்கிரசு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்'

'நம்முடைய விரலால் நம் கண்ணையே குத்துவது போல, நமது வரிப்பணத்தைக் கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும் அளித்துத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'

கொத்துக் கொத்தாய் தமிழர்களைக்
கொன்று குவித்த
காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்

'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, 15வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. உங்களது வாக்குகளைக் கேட்க எல்லாக் கட்சியினரும் வருவார்கள். நாங்கள் கேட்பதெல்லாம், காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்பதுதான்.

'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்று குவித்தார்கள். நாம் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம். ஊடகங்களாலும், காவல்துறையாலும், உளவுத் துறையாலும் நம்மை செயலிழக்க வைத்திருந்தார்கள். இப்போது நம் கையில் ஒரு ஆயுதம் கிடைத்திருக்கிறது. வாக்குச் சீட்டு என்ற ஆயுதம். அதைப் பயன்படுத்தி காங்கிரசைத் தமிழ்நாட்டில் வேரறுப்போம்'

'ஈழத்து மக்களுக்காக நாம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்திப் போராட வேண்டாம். வரலாறு நம் கையில் ஒரு வலுவான ஆயுதத்தைத் தந்திருக்கிறது. வாக்குச் சீட்டு. அதைப் பயன்படுத்தி காங்கிரசை விரட்டியடிப்போம்'


'20 ஆண்டுகளாக நான்கு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம். ஞானசேகரன் என்ன செய்தால் பாலாற்றுப் பிரச்சனையைத் தீர்த்தாரா? பாலாற்றில் தண்ணீர் வரத்தே இல்லை. அதைப்பற்றி காங்கிரசு ஆளும் ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் வரச் செய்தாரா?

'மணற்கொள்ளையை எதிர்த்தாரா? இல்லை இல்லை! அதற்குத் துணை போனார்?'

'அரசியலுக்கு வரும் போது சாதாரண நடுத்தரக் குடும்பத்தனராக வந்த ஞானசேகரன் இருபது ஆண்டுகளில் இரண்டாயிரம் கோடிசொத்து சேர்த்திருக்கிறாரே! இதெல்லாம் எங்கிருந்து வந்தது? நமது வரிப்பணம்தான்'

'நாங்கள் யாருக்கும் வோட்டு கேட்டு வரவில்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். காங்கிரசுக் கட்சிக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். ஞானசேகரனுக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக் கூடிய யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'


இப்படி முழக்கங்களுடனும், கோஷங்களுடனும் வண்டி மக்கள் நடமாட்டம் நிறைந்த தெருக்கள் வழியே நகர்ந்தது. அகலமான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வண்டியை நிறுத்தக் கூடிய இடங்களில் 10 நிமிடங்கள் நின்று கோஷம் எழுப்பினார்கள்.

வண்டியின் இரு பக்கங்களிலும் ஈழப்படுகொலையின் நிழல்படங்களை ஃபிளெக்சு தட்டிகளாகக் கட்டியிருந்தார்கள். துண்டறிக்கையில்,

=============
தமிழக வாக்காள பெருமக்களே!
மக்கள் எதிரி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை. இந்தியா - இலங்கை கூட்டு சதி. கொலைவெறி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில். அடிப்படை மனிதாபிமான உதவிகளை கூடச் செய்யத் தடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு?

>> 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை. சிங்கள படைக்கு ஆயுதம் கொடுத்து காட்டிக் கொடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு?

>> தமிழர்களின் பாரம்பரிய நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தமிழர்கள் அனுமதி இல்லாமல் தாரை வார்த்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 70,000க்கும் மேற்பட்ட காஷ்மீர் மக்களை கொன்று குவித்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> பாபர் மசூதியை இடித்த சங்கப் பரிவாரக் கும்பலின் கள்ளக் கூட்டாளி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> காங்கிரசுக் கொள்கை காந்தியம்(?), காந்தியின் கொள்கை மதுவிலக்கு. மதுவில் தள்ளாடுது வேலூர். தமிழர்களே! என்ன செய்வதாய் உத்தேசம்?

>> ஆரம்பப் பள்ளியில் ஏழைக் குழந்தைகள், ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. மறுபக்கம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடு ஸ்பெக்ட்ரம் ஊழல். கூட்டுக்களவாணி காங்கிரசு கும்பலுக்கா உங்கள் வாக்கு?

>> 60 ஆயிரம் கோடி காமன்வெல்த் ஊழல். ஊழலின் ஊற்று காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

தொடர்புக்கு : காங்கிரசு எதிர்ப்பு முன்னணி  - தமிழ்நாடு
9444204740/9042274271

குறிப்பு: இந்த முன்னணியில் இணைந்து வேலை செய்ய ஆர்வமுள்ள தமிழ் 
இளைஞர்கள் மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 

ஊர் கூடி தேர் இழுப்போம் தமிழர்களே.
=============

உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனம் எதையும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். வேலூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் வண்டி ஓட்டுனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள  தன்னார்வலர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். உள்ளூர் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு பேர்.

அகலமான கடை வீதியின் (மண்டி வீதி) இரண்டு பக்கங்களிலும் இருக்கும் கடைகளில் துண்டறிக்கையைக் கொடுக்க ஆரம்பித்தேன். தெருவில் ஒலிபெருக்கியில் பேசுவதைக் கேட்டதும், எட்டிப் பார்க்கிறார்கள். என்னவென்று ஒரு கேள்வியுடன் நிற்கிறார்கள். அப்போது துண்டறிக்கையைக் கொடுத்ததும் ஆர்வமாக வாங்கிக் கொள்கிறார்கள்.

'நீங்க இந்த மாதிரி பிரச்சாரம் செய்தா தொந்தரவு எதுவும் வராதா? எதிர்க் கட்சி ஆளுங்க உங்களை மிரட்ட மாட்டாங்களா'
'நம்ம கருத்துக்களைச் சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அதைத்தானே செய்கிறோம்'

'நீங்க எந்தக் கூட்டணி? எந்தக் கட்சி?'
'எந்தக் கட்சியும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகளால் மனம் நொந்து கோபத்தில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த களம் இறங்கியிருக்கிறார்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ள பிரச்சாரம் செய்கிறீர்கள்'

'மொதல்ல கை கொடுங்க! நல்ல உருப்படியான பணியைச் செய்கிறீர்கள்.'
'நீங்களும் சேர்ந்து கொள்ளலாம். உங்க நண்பர்கள் உறவினர்களிடம் செய்தியைக் கொண்டு செல்லுங்கள்'
'ஏற்கனவே செய்துகிட்டுத்தான் இருக்கிறோம்'

'ஏய், இது நம்மக் கட்சி, ரெட்ட இல'
'நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தச் சின்னத்துக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், காங்கிரசுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்கத்தான் நாங்கள் வருகிறோம்'

நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளை வினியோகித்தோம். சாலையின் இரண்டு புறம் இருக்கும் கடைகள், நடந்து செல்பவர்கள், கடந்து செல்லும் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் என்று கொடுத்தோம். எந்த இடத்திலுமே கொடுக்கப்பட்ட துண்டறிக்கை தரையில் வீசப்பட்டதைப் பார்க்கவில்லை. வாங்கியவர்கள் எல்லாம் கவனமாகப் படித்துப் பார்த்தார்கள்.

இந்தப் பகுதியில், சிஎம்சியில் சிகிச்சைக்காக வந்திருக்கும் வெளிமாநில மக்களும் காணப்படுவார்கள்.

'தமிழ் நஹீ மாலூம். யே கோன்சா பார்ட்டி கா?'
'கிசீ பார்ட்டி கா நஹீ. காங்கிரஸ் பார்ட்டி கோ வோட் ந தேனே கா'

மிகவும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மணி நேரத்தில் கடந்து செல்வார்கள். வண்டி மெதுவாக நகர்ந்து பக்கவாட்டுத் தெருக்கள் பக்கம் வந்தது. சாட் வண்டி ஒன்றின் முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுத்தேன்.

'காங்கிரசு தமிழ்நாட்டில எதுக்கு? திமுக 25 வருஷம் முன்பாகவே காங்கிரசை விரட்டி அடிக்க வைச்சாங்க. இந்தக் கருணாநிதிதான் கூட்டணி வச்சு உயிர் கொடுத்திருக்கிறாரு'
'ஆமா 1967ல் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் சங்கு ஊதியாச்சு. ஆனால் அதற்குப் பிறகு, கருணாநிதியும் எம்ஜிஆரும் மாறி மாறி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்'

பக்கவாட்டுத் தெருக்கள் குறுகலானவை. வண்டி போகும் பின்னால் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன. அதனால் நிற்கவே செய்யாமல், நகர்ந்து கொண்டே போனோம்.

எதிரில் வருபவர்கள், என்ன சத்தம் என்று பார்த்துக் கொண்டே நிற்பவர்கள் கையில் 'ஐயா வணக்கம்', 'சார்' என்று சொல்லி துண்டறிக்கையை கொடுத்தோம். கொஞ்சம் வட இந்திய முகமாக தெரிந்தால் கொடுக்கவில்லை.

நான்கைந்து தெருக்களைத் தாண்டி சிஎம்சி பிரதான நுழைவாயில் இருக்கும் சாலைக்கு வந்தது. இங்கு பேருந்துகளும் வாகனங்களும் நெருக்கமாகப் போகும் இடம். சாலையின் எதிர் பக்கத்துக்குப் போய் துண்டறிக்கை கொடுக்க வாய்ப்பில்லை. மெதுவாக நகர்ந்து சாலை சந்திப்பைக் கடந்து கோட்டையின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தினோம்.

'நீங்க சத்தம் போடுங்கடா பாடுங்களா! ஒன்னும் கிழிக்க முடியாது' என்று ஒருத்தன் திட்டுறான். என்று சொல்லியபடி ஒருவர் தாமதமாக வந்தார். 'திட்டுறவங்க திட்டட்டும். நாம நம்ம கோஷத்தைப் போடுவோம்'

அங்கிருந்து வேலூர் பைபாஸ் வந்தோம். துண்டறிக்கை கையிருப்பு தீர்ந்து விட்டிருந்தது. 40-50 மட்டுமே மிஞ்சியிருந்தது. 'பர்வீன் டிராவல்ஸ் எங்க இருக்கு? அதில் அனுப்பியிருக்காங்களாம். போய் வாங்கிக் கொள்ளலாம்' என்று விசாரித்தார்கள்.

இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் நண்பர் ஒருவரின் வீட்டில் கன்னிகாபுரத்தில் தங்கியிருக்கிறார்கள்.

'காலையில் வண்டியை சீஸ் பண்ணி ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிட்டான். அனுமதிச் சீட்டின் ஒரிஜினல் வண்டியில் இருக்கணுமாம். நம்மிடம் ஜெராக்ஸ் காப்பிதான் இருந்தது.'

'வேறு தொகுதிகளிலும் இது போன்று பிரச்சாரம் செய்ய ஏதாவது சுயேச்சை வேட்பாளரின் அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்'

மிகவும் தெளிவாக, தேவையில்லாத விஷயங்களை இழுக்காமல் தமிழர் விரோதம் என்ற ஒரே முழக்கத்தை வைத்து பிரச்சாரத்தை வடிவமைத்திருந்தார்கள். 2ம் தேதி ஆரம்பித்தார்களாம். 11ம் தேதி வரை பிரச்சாரம் தொடரும். இன்னும் 6 நாட்கள்.

'தமிழ் அமைப்புகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்'
'என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்'

புறநகர்ச்சாலையில் நகர்ந்தோம். துண்டறிக்கைகளை மக்கள் கூடும் இடங்களில் வினியோகிக்கலாம் என்று சேர்த்து வைத்துக் கொண்டோம். புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் போது சிஎம்சி நோக்கிப் போகும் சாலையின் முனையில் நிறுத்தினார்கள். அது ஒரு பேருந்து நிறுத்தம். இங்கு வினியோகிக்கலாம்.

பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், கடந்து போகிறவர்கள், வந்து நிற்கும் பேருந்தில் இருப்பவர்கள் என்று வினியோகித்தோம். நிற்கும் பேருந்தின் முன் பகுதி சன்னல்களில் ஒருத்தரும், பின்பகுதி சன்னல் வழியாக இன்னொருவரும் துண்டறிக்கைகளைக் கொடுத்தோம். வண்டியின் ஒலிபெருக்கி மூலமாக பேச்சு கேட்கும் போது துண்டறிக்கை கொடுப்பது எளிதாக இருந்தது.

எட்டரை மணி வாக்கில் முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் -6



இந்திய விடுதலைக்குப் பாடிய கவிஞர்களைப் பற்றிய ஆவணப் படத்தை நடுவண் அரசின் செய்தி விளம்பரத்துறை வெளியிட்டது.  சிற்றரசுகளைப் பாடிய இரவீந்திரநாத தாகூரும், இயற்கையைப் பாடிய சரோசினி தேவியும் இடம் பெற்றிருந்தனர்; தமிழகத்துப் பாரதியாரோ, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையோ, நாமக்கல் கவிஞரோ இடம் பெறவில்லை.

பட்டுகோட்டை, பேராவூர்னியை கலக்கிய தமிழ் தேச மாணவர் இயக்கம்









வேலூரில் வெகுண்டெழுந்த காங்கிரசு எதிர்ப்பு முன்னணி




















வால்பாறையில் மள்ளர் மீட்பு களம்







Sunday 10 April 2011

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் -5


ஆங்கில அரசை எதிர்த்து தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் நிதி உதவிகளையும் பெற்று வ.உ.சிதம்பரனார் இரண்டு கப்பல்களை வாங்கி ஓட்டினார். அவர் சிறைப்பட்டபோதுகப்பல் நிறுவனத்தை முடக்கினர்தொழிலாளிகளுக்குத் தம் மனைவியின் தாலியையும் விற்று உணவளித்திடச் செய்தார். சிறையிலிருந்து நோய்நொடியுடன் வெளியில் வந்து வறுமையில் வாடியபோது, தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தந்த நிதியைக் கொடுக்க மறந்துவிட்டனர் பேராயக்கட்சியினர்சிறைலிருந்தபோது அவர் வாங்கிய கப்பல்களை எந்த ஆங்கிலகப்பல் நிறுவனத்தை எதிர்த்துக் கப்பல் இயக்கினாரோ அந்த ஆங்கில நிறுவனத்திடமே விற்றார்கள்!