Pages

Saturday 2 April 2011

காங்கிரசு



இனப்படுகொலையின்
மறுபெயர்
களவாணிகளின்
உறைவிடம்
கதரில் காவி பூண்ட
கருங்காலிகள்
காட்டிகொடுப்பதை
கண்ணும் கருத்துமாய் செய்யும்
கண‌வான்கள்


போப்பர்சு, ஸ்பெக்ட்ரம்
இஸ்ரோ என்று இவர்கள்
கைபையை நிறைத்தது
எத்தனை எத்தனை?


காலிஸ்தான், ஈழம்,
காசுமீரென்று இவர்கள்
கையில் படிந்த
இரத்த கறை
எத்தனை எத்தனை?


பகத்சிங், அம்பேத்கர்
என்று இவர்களால்
கழுத்தறுபட்டவர்கள்
எத்தனைபேர்?



ஆண்டாண்டாய் நம்மை
ஆண்டுவிட்டான்
அடிமையாய் நம்மை
ஆக்கிவிட்டான்


உயிர் காக்கும்
மருத்துவத்தை
வியாபாரம்
ஆக்கிவிட்டான்


கண் திறக்கும்
கல்விதனை
களவாணிகளிடம்
காவு தந்தான்

ஊரையே விற்று
உலை வைத்தான்
அணு உலை தனை
திறந்து வைத்தான்


விளைநிலம் தனையும்
விழ‌லாய் மாற்றி
சந்தைக்கு அனுப்பிவிட்டான்
மக்களை கொல்லும்
இரசாயன ஆலைகள்
ஊருக்கொன்றாய்
திறந்து வைத்தான்


ஏழைகள் குடிலெறித்தான்
ஏளனம் அதை செய்தான்
ஏரி குளத்திலெல்லாம்
ஏற்றிவிட்டான் கட்டிடத்தை


கடல்கொண்ட மீனவனை
கண்ணெதிரேச் சுட்டு கொல்ல
கள்ள‌ மவுனம் கொண்டு
கழிப்புடன் அதை ரசித்து
சிங்கள காடையருடன்
கொஞ்சி குலாவி வந்தான்


கருவினில் சிசுவழித்தான்
கன‌வுகள் தனை அழித்தான்
இனவெறி அரசுடன்
இன்புற்று உறவு கொண்டு
ஈழத்தில் எம்
இனம் அழித்தான்


இவன் தந்த ஆயுதம்
என் சொந்தத்தை
மட்டுமா கொன்றது
எனக்கும் இவனுக்கும்
இருந்த பந்தத்தையும்
சேர்த்தே தான் கொன்றது


வேரறுக்க வேண்டிய நாள்
வெகு விரைவில்
வெகுண்டெழுவோம்
மண் காக்க.......

- அருண் ஷோரி


No comments:

Post a Comment