Pages

Thursday 3 March 2011

இந்திய பொதுவுடமை கட்சி மார்க்சிய லெலினிய விடுதலை 11 தொகுதிகளி போட்டியிட முடிவு

தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய பொதுவுடமை கட்சி மார்க்சிய லெலினிய விடுதலை 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

நெல்லையில் இந்திய பொதுவுடமை கட்சி மார்க்சிய லெலினிய விடுதலையின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குமராசாமி கூறியதாவது,

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும் அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சட்டசபையி்ல் எதிர்கட்சி வரிசையில் இருந்து போராட 11 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

நெல்லை தொகுதியில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தேன்மொழி, குளச்சலில் ஏஐசிசிடியூ மாநில துணை தலைவர் அந்தோணி முத்து, உளுந்தூர்பேட்டையில் வெங்கடேசன், சோழவந்தானில் முருகேசன், கந்தர்வ கோட்டையில் ஆசைதம்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருவிடைமருதூரில் இளங்கோவன், ஸ்ரீபெரும்புதூரில் சாக்ரடீஸ், மேட்டுபாளையத்தில் ஆர். ஜானகிராமன், அம்பத்தூரில் ஏஐசிசிடியு மாநில செயலாளர் பழனி வேல், குமாரபாளையத்தில் வெங்கடாசலம், மாதவரத்தில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நெல்லை தொகுதி இந்திய பொதுவுடமை கட்சி மார்க்சிய லெலினிய விடுதலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேன்மொழி சுத்திமல்லியில் வசித்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர். 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2006-ம் ஆண்டு சட்டசபை தொகுதியில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டார்

No comments:

Post a Comment