Pages

Sunday 6 March 2011

சிபிஐ செயற்குழு கூடியது. தகுதிப் பங்கீடு குறித்து விவாதித்து முக்கிய முடிவு

 மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் குறித்து முடிவு செய்யும் பணியில் அதிமுக தீவிரமாக உள்ளது. இன்றைக்குள் இக்கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. சில குட்டிக் கட்சிகளுக்கும் கூட ஆளுக்கு இத்தனை சீட் என்று முடித்து விட்டது அதிமுக.

ஆனால் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து இதுவரை வாய் திறக்காமல் உள்ளது அதிமுக.

இந்த நிலையில் இந்தக் கட்சிகளுக்கு இன்றைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ செயற்குழுவில் முக்கிய முடிவு?:

இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment