Pages

Sunday 27 February 2011

தொகுதிப் பங்கீடு-திமுகவுடன் தேசிய லீக், அருந்ததியர் மக்கள் கட்சி பேச்சு

சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன், தமிழ் மாநில தேசிய லீக் மற்றும் அருந்ததியர் மக்கள் கட்சி ஆகியவை இன்று பேச்சு நடத்தின.

தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் பெரும் குழப்பம் விளைவித்துள்ளதால் மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை தீவிரமாக்கியுள்ளது திமுக.

பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அக்கட்சி நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியது. இந்த மூன்று தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் கட்சி உதயசூரியன் தொகுதியில்தான் போட்டியிடும்.

இந்த நிலையில், இன்று தமிழ் மாநில தேசிய லீக் கட்சி மற்றும் அருந்ததியர் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக பேச்சு நடத்தியது.

இரு கட்சிகளின் தலைவர்களும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன் பேச்சு நடத்தினர்.

தேசிய லீக் கட்சித் தலைவர் திருப்பூர் அல்தாப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக கூட்டணிக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளோம். திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

அருந்ததியர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் வலசை ரவி பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

No comments:

Post a Comment