Pages

Sunday 27 February 2011

தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்?

தி்முக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு நேற்றைக்குள் முடிவாகி விடும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருந்த நிலையில் திடீரென அதில் பெரும் இழுபறி ஏற்பட்டு விட்டது. இதற்கு அமைச்சர் துரைமுருகனின் பேச்சுதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு நாளே அதற்கு உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட பல முக்கிய வேலைகளை முடித்து விட்டது. தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான பேச்சுக்களும் கூட சரியான திசையில் செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அதில் பெரிய தொய்வு ஏற்பட்டு விட்டது.

இதற்கு முக்கியக் காரணம், திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் துரைமுருகன்தான் என்று கூறப்படுகிறது. அவர் கிண்டலாகப் பேசியதால் கோபமடைந்த காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் அறிவாலயத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டனராம்.

இதனால்தான் நேற்றே முடிவாகியிருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு விவகாரத்திற்கு தடங்கல் ஏற்பட்டு விட்டதாம்.

நாங்கள் 200 தொகுதிகள் லோக்சபா தேர்தலில் கொடுங்கள் என்று கேட்டால் சும்மா இருப்பீர்களா, சும்மா மிரட்டாதீர்கள் என்று கிண்டலாக துரைமுருகன் கூறியதே சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள்.

தங்களை திமுக தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று காங்கிரஸ் மத்தியில் கோபம் எழுந்துள்ளதாம்.

அதேசமயம், இன்னும் ஓரிரு நாளில், அனேகமாக இன்றைக்குள் கூட தொகுதிப் பங்கீடு சுமூக முடிவை எட்டும் என்று திமுக, காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment