Pages

Thursday 24 February 2011

சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்ககும் சுயேட்சைகளுக்கும் ஆதரவு: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது,

தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் இழந்து நிற்கின்றனர். நீதிமன்றத் தடையை மீறி நம் கண்முன்னே ஆற்று மணல் கொள்ளைபோகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப்படுகிறது.

நெல் விளைந்த பூமியில் இன்று கல் முளைத்திருக்கிறது. விவசாய நிலங்கள் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுகின்றன. நெல்லும், பருப்பும் பூமியில் இருந்து தான் விளைவிக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.

தமிழகத்தில் கள்ள ஓட்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே, வரும் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில் வெளிமாநில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழர்களை அழிக்க உதவிய காங்கிரஸ் தான் எங்கள் எதிரி. ஆகையால் வரும் தோர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளர்களையும் ஆதரிப்போம் என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தான் காங்கிரஸை எதிர்த்து நிற்கும் எந்தக் கட்சியையும் ஆதிர்ப்போம் என்று சீமான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment