Pages

Wednesday 23 February 2011

"தி.மு.க கூட்டணியை தோற்கடிப்போம்': என்.எஸ்.பழனிசாமி


 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை தோற்கடிப்போம் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.எஸ்.பழனிசாமி (முன்னாள் எம்.எல்.ஏ) தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
விவசாய விரோதக் கொள்கையுடன் தி.மு.க அரசு செயல்படுகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியை விவசாயிகள் தோற்கடிக்க வேண்டும். தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை விவசாய அமைப்புகள் ஒன்று கூடி விவாதித்து முடிவு செய்யும்.
கள் எந்தக் கலப்படமும் இல்லாத பானம். இதனை நச்சு கள் என்று கூறி விவசாயிகளை சிறையில் அடைக்கும் தி.மு.க அரசை கண்டித்து வரும் 24-ம் தேதி கோவையில் எப்.ஐ.ஆர். நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment