Pages

Monday 28 February 2011

திமுக கூட்டணியைவிட்டு எவ்பொழுதும் விலக மாட்டோம் : திருமாவளவன் உறுதி

என்னதான் தொகுதிப் பங்கீ்ட்டில் நெருக்கடி இருந்தாலும் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

எங்கள் கட்சியில் இருக்கும் பொரும்பாலான தொண்டர்கள் கூலித் தொழிலாளர்கள். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டில் நெருக்கடி இருக்கலாம். ஆனால் அதற்காகவெல்லாம் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம். இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்று வந்த செய்திகள் ஆதாரம் இல்லாதவை. அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் கூட்டணி தலைமை மீது விசுவாசம் உள்ளவர்கள்.

எங்கள் விசுவாசத்திற்கு பரிசு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்கள் உணர்வுகள் பற்றி திமுகவுக்கு தெரியும். அவற்றை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களை தேவையில்லாமல் வற்புறுத்த வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. திமுகவுக்கு எங்கள் பலமும், தகுதியும் நன்றாகத் தெரியும். அதற்கு தகுந்தாற்போல தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதும் தெரியும். அவ்வாறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் எப்பொழுதும் திமுகவுடன் இருக்கவே விரும்புகிறோம். ஆகையால் பேச்சுவார்த்தையின்போது நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு முடிந்ததுவுடன் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதற்கு முன்பு அதுபற்றி எதுவும் பேசும் எண்ணம் இல்லை என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் கூறும்போது, வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்ந்து இருப்பது எங்கள் கூட்டணிக்கு அதிக பலம் சேர்த்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment