Pages

Saturday 26 February 2011

திமுகவுடன் விரைவில் தொகுதி உடன்பாடு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் - திமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஜி. ஆதிகேசவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.விழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது:திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004, 2006, 2009 தேர்தல்களில் வெற்றி பெற்ற இக்கூட்டணி, நான்காவது முறையாக வரும் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறும்.திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு இணக்கமான முறையில் நடைபெற்று வருகிறது. சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்படும். தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.தொழிற்சங்கத் தலைவரான ஆதிகேசவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருப்பதன் மூலம் அடித்தட்டு மக்களின் உணர்வுகள் காங்கிரஸýக்கு சாதகமாக இருப்பதை அறிய முடிகிறது.காங்கிரஸ் ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும் கட்சியாகும். எனவே, ஆதிகேசவர் போன்றவர்கள் கட்சிக்கும், சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கும் விசுவாசமாக இருந்து உழைத்தால் பெரிய பதவிகள் அவர்களைத் தேடி வரும் என்றார்.சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் கே. சிரஞ்சீவி, ஆர். தாமேதரன், டி.எல். சிவலிங்கம், என். அருள்பெத்தையா, ஒய்.வி.ஆர். ராஜூ உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment