Pages

Saturday 26 February 2011

பேரவைத் தேர்தலை புறக்கணிக்க இருளர் கிராம மக்கள் முடிவு

வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், குடிநீர், சாலை வசதி ஆகியன கோரி, வரும் பேரவைத் தேர்தலை புறக்கணிக்க கடலூர் மாவட்டத்தில் 7 தாலுக்காக்களில் 136 கிராமங்களில் வசிக்கும் இருளர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.சிதம்பரத்தை அடுத்த கிள்ளை கண்ணியம்மாள் நகரில் சர்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு மாநில துணைச் செயலாளர் எல்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.குமார், துணைச் செயலாளர் கே.மாரியம்மாள், எம்.மாயவன் ஆர்,செல்வி, எம்.சரோஜா, எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், குடிநீர் வசதி, மயான வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளாததை கண்டித்து பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment