Pages

Sunday 27 February 2011

ஊழல் சக்தி, குடும்ப ஆட்சிகளை பாஜக வேறோடு அகற்றும்: நிதின் கட்காரி

மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் சக்திகளையும், குடும்ப ஆட்சியையும் வேறொடு அகற்றுவோம் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கோரி பாஜ மகளிரணி சார்பில் நேற்று நாகர்கோவிலில் பேரணி மற்றும் போராட்டம் நடந்தது.

பேரணி முடிவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய பாஜக தலைவர நிதின் கட்காரி பேசியதாவது,

1945-ம் ஆண்டு முதல் 65 ஆண்டுகளாக நாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்தது. தமிழகத்திலும் ஆட்சியில் இருந்தது. இங்கு காங்கிரஸ், தி்முக, அதிமுக கட்சிகள் ஆட்சியில் இருந்து வந்தன. தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது.

நாட்டில் 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு பொறுப்பை காங்கிரஸ் ஏற்க வேண்டும். நாட்டில் விலைவாசி தினமும் உயர்ந்து கொண்டே போகிறது.

பாஜக ஜனநாயக கட்சி என்பதில் பெருமை கொள்கிறேன். காங்கிரசில் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என அவர்களது குடும்பத்தினர் தான் தலைவர்களாக ஆக முடியும். பிரணாப்போ, மன்மோகன்சிங்கோ கட்சி தலைவராக முடியாது. தமிழகத்திலும் குடும்ப ஆட்சி நடக்கிறது. குடும்ப ஆட்சி நடத்தி கொள்ளை அடித்து வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா உள்பட அனைவருமே ஊழல்வாதிகள்தான். ஸ்பெக்டரம், காமன்வெல்த் ஊழல் என எல்லாமே ஊழல்தான். வெளிநாட்டில் 20 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் உள்ளது. இதனை மீட்க பாஜக பாடுபடும். இன்று மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். வரும் 2014-ம் ஆண்டு தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் சக்திகளையும், குடும்ப ஆட்சியையும் வேறொடு அகற்றுவோம் என்றார்

No comments:

Post a Comment