Pages

Saturday 26 February 2011

கூட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும், பாமகவினரும் கலந்து கொள்ளாததால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.அமைச்சர் க. பொன்முடி விருப்பமனு தாக்கல் செய்ய புறப்படுவதற்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஆனால் காங்கிரஸ் கட்சியும், பாமகவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவில்லை. பாமகவினர் வருவதற்கு தாமதமானதால், நான்குமுனை சந்திப்பில் மேல்மலையனூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் பாமகவினர் அமைச்சர் பொன்முடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.

No comments:

Post a Comment