Pages

Saturday 26 February 2011

திமுக-காங்கிரஸ் 2-ம் கட்டப் பேச்சு: முடிவு ஏற்படவில்லை

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இக் கட்சிகளுக்கு இடையே முதல்சுற்றுப் பேச்சு கடந்த 19-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு தொகுதி ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு தருவது தொடர்பாக உத்தரவாதம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம், அது செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க குழு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் குழுவினர் முன்வைத்தனர்.ஏற்கெனவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், காங்கிரஸ் கோரும் அளவுக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் குழுவினர் தில்லி சென்று, பேச்சுவார்த்தை பற்றி அக் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்தனர்.பிறகு சென்னை திரும்பிய பிறகு இரண்டாவது சுற்றுப் பேச்சு வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கி 9.15 மணி வரை நடந்தது.இப்போதும் தங்களின் கூடுதல் தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் விட்டுக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.இதற்கிடையில் 9 மணி அளவில் முதல்வர் கருணாநிதி அறிவாலயத்துக்குச் சென்றார். அவர் வருகை பற்றி அறிந்ததும், தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பேச்சு நடந்த அரங்கிற்குச் செல்லாமல் தனது அறையில் முதல்வர் காத்திருந்தார்.பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து துணை முதல்வர் ஸ்டாலினும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் முதல்வரிடம் சென்று விளக்கினர்.அதன்பிறகு பேச்சு நடந்த அரங்கிற்கு ஸ்டாலின் சென்ற சிறிது நேரத்தில் காங்கிரஸ் குழுவினர் வெளியில் வந்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், இந்த விவரங்களைக் கட்சித் தலைமையிடம் தாங்கள் தெரிவிக்கப் போவதாகவும் கூறினார்.அதேபோல திமுக தரப்பிலும் அவர்கள் தலைமையுடன் கலந்து ஆலோசித்த பிறகு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தங்கபாலு குறிப்பிட்டார்.அறிவாலயத்தில் முதல்வர் இருந்தபோதிலும், காங்கிரஸ் குழுவினர் முதல்வரைச் சந்திக்கவில்லை. வெளியில் வந்தவுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயக்குமார் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.காங்கிரஸ் குழுவினர் சென்ற பிறகு திமுக குழுவினரோடு முதல்வர் கருணாநிதி அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.இழுபறி இல்லைசென்னை, பிப். 25: திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சில் இழுபறி இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.காங்கிரஸýடன் 2-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், திமுக ஐவர் குழுவுடன் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இரவு 10.05 மணிக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அளித்த பதில்:திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?மூன்றாவது கட்டத்துக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?இழுபறி ஒன்றுமில்லை.காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறது?234 தொகுதிகள் (சிரித்துக் கொண்டே...)ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் இருப்பதாலேயே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?அது உங்களுடைய (செய்தியாளர்கள்) கற்பனை.அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?இரண்டு நாட்களில் நடக்கும்.தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸிடம் ஏதேனும் புதிய திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளீர்களா?அது ரகசியமானது."தில்லியில் பேசி கொள்கிறோம்'தொகுதிப் பங்கீடு தொடர்பாக தில்லியில் பேசிக் கொள்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காங்கிரஸ் ஐவர் குழுவினரின் கருத்துகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு வந்த ஸ்டாலின், தில்லியில் பேசிக் கொள்கிறோம் என்று முதல்வர் கூறியதாகத் தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment